Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மகளுடன் நடிக்கும் புதிய படம்... நடிகர் சங்க நிலத்தில் பூஜை போடும் கமல்
சென்னை: நடிகர் சங்க நிலத்தில் தன்னுடைய அடுத்த படத்தின் துவக்க விழா நடைபெறும் என கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.
கமல்- ஸ்ருதிஹாசன் முதன்முறையாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 29 ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்நிலையில் படத்தின் தொடக்க விழாவை நடிகர் சங்க நிலத்தில் தொடங்கவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் 'ராஜ்கமல் நிறுவனத்தின் 41 வது படத்தை எங்களுடைய குடும்ப இடமான நடிகர் சங்க நிலத்தில் துவங்குகிறோம்.
நடிகர் சங்கத்துக்கு நன்றி' என்று தெரிவித்திருக்கிறார். கமலின் இந்த அறிவிப்பு நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மேலும் நடிகர் சங்க நிலத்தில் துவங்குவதால் இப்பட பூஜையில், கோலிவுட்டின் ஒட்டுமொத்த நடிக, நடிகையரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.