Don't Miss!
- News அமேதி தொகுதியில் ராகுல் காந்தி "மைத்துனர்" ராபர்ட் வதேரா போட்டியா? காங்கிரஸ் போஸ்டர்களால் பரபரப்பு!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கமல் வீட்டு மாடியும் மூன்று முடிச்சு ரஜினியும்!
எழுபதுகள் எண்பதுகள் என்றில்லை... இன்றைக்குப் பார்த்தாலும் கையில் சிகரெட்டுடன் ரஜினி நிற்கும் ஒரு கறுப்பு வெள்ளை ஸ்டில் பார்த்ததும் சட்டென்று கவனம் கவரும்.
இந்த ஸ்டில் எடுக்கப்பட்டது மூன்று முடிச்சு படத்துக்காக. கமல் ஹாஸனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டு (இப்போது அலுவலகம்) மாடியில். இதனை சமீபத்தில் நடந்த மய்யம் பட இசை வெளியீட்டு விழாவில் கமல் நினைவு கூர்ந்தார்.
நவீன் சஞ்சய், ஜெய் குஹானி நடிக்கும் மய்யம் படத்தை ஆதித்யா பாஸ்கர் இயக்க, கமலின் நண்பரும் ஓவியருமான ஏ.பி.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.
கமல் வெளியிட்டார்
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடந்தது. இதில், கமல்ஹாசன் கலந்துகொண்டு பாடலை வெளியிட, நடிகை கவுதமி பெற்றுக்கொண்டார்.
ஆவி படங்கள்
கமல் பேசுகையில், "எனக்கு ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், தற்போது ஆவி படங்களுக்குத்தான் நல்ல மார்க்கெட் உள்ளது.
நானும் சக்தியும்
இந்த விழா நடந்து கொண்டு இருக்கிற இடத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறது. ஆர்.சி. சக்தி மற்றும் கமல் என்ற பெயர் தெரியாத இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இந்த இடத்தில்தான் ‘உணர்ச்சிகள்' என்ற படத்தை ஆரம்பித்தோம்.
வேறு நாயகன் கிடைக்காததால்...
அந்த படத்துக்கு நாயகன் வேடத்துக்கு வேறு ஆள் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் அந்த கதாபாத்தித்துக்கு நான் கிடைத்தேன். அங்கு எடுத்த படங்களைப் பார்த்துதான் அய்யா கே.பாலச்சந்தர் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்.
ரஜினி
இங்குதான் பாரதிராஜா, மணிரத்னமெல்லாம் பேசி மகிழ்ந்திருக்கிறோம். பாலசந்தர் பலமுறை வந்து போயிருக்கிறார். அதோ அந்த பக்கத்து மாடியில் நின்று ஒரு இளைஞர் சிகரெட் பிடிப்பது போன்ற ‘போட்டோஷூட்'டும் இங்கு நடந்தது. அவர்தான் ‘மூன்று முடிச்சு' படத்தில் நடித்த ரஜினிகாந்த்.
வாழ்த்துகிறேன்
இப்படி பலருடைய சினிமா வாழ்க்கை இங்குதான் அரங்கேற்றப்பட்டது. அப்படிப்பட்ட இடத்தில் இளைய தலைமுறையினர் எடுக்கும் ‘மய்யம்' படவிழாவும் நடக்கிறது. இவர்களும் வளர வாழ்த்துகிறேன்," என்றார்.
ஏபி ஸ்ரீதர்
தயாரிப்பாளர் ஸ்ரீதர் கூறுகையில், "இந்த படத்தின் இயக்குநர் ஆதித்யா பாஸ்கர்ல, பங்குபெற்ற அத்தனை பேரும் கல்லூரிகளில் படிச்சுக்கிட்டு இருக்கிற மாணவர்கள். கல்லூரி விடுமுறை ஆரம்பிக்கும் போது படம் எடுத்து, லீவ் முடியறதுக்குள்ள படத்தை முடிச்சுட்டோம். படத்தை போட்டு பார்க்கிற வரைக்கும் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு இருந்தேன். முழுசா பார்த்து திருப்தியான பிறகுதான் இப்படியொரு படம் எடுக்கிற தகவலையே வெளியில் சொல்ல ஆரம்பிச்சேன்," என்றார்.