Don't Miss!
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- News தமிழகத்தில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்!இதையெல்லாம் செய்ய கூடாது! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
கர்நாடக பந்த்தால் பொலிவிழந்த "கண்மணியும், காஞ்சனாவும்"!
பெங்களூரு: கர்நாடக பந்த் காரணமாக நேற்று கர்நாடகத்தின் சில பகுதிகளில் ஓ காதல் கண்மணி மற்றும் காஞ்சனா 2 படத்தின் வசூல் பாதிக்கப்பட்டது.
இரு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் பரவி வருவதால் தமிழகத்தில் இப்படங்களுக்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. அதேபோல பிற மாநிலங்களிலும் வசூல் திருப்திகரமாக உள்ளதாம்.
ஆனால் கர்நாடகத்தில்தான் இதன் வசூலில் நேற்று சற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று நடந்த பந்த் காரணமாக இரு படங்களின் வசூலும் பாதிப்பைச் சந்தித்தது. மாலை மற்றும் இரவுக் காட்சிகள் மட்டுமே ஓடின.
நல்ல வரவேற்பு...
ரிலீஸானபோது இரு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓ காதல் கண்மணிக்கு பெங்களூரில் 82 காட்சிகள் ஓடின. காஞ்சனாவுக்கு 67 காட்சிகள் ஓடின.
ஹவுஸ் புல்...
முதல் நாளில் கண்மணி ஓடிய தியேட்டர்களில் 75 சதவீத இருக்கைகள் நிரம்பின. காஞ்சனாவுக்கு 65 சதவீத சீட்டுகள் நிரம்பியிருந்தன. மேலும் முக்கிய தியேட்டர்களில் இரு படங்களும் ஹவுஸ் புல் ஆகியிருந்தன.
பந்த்...
ஆனால் நேற்று இரு படங்களின் வேகமும் தடைபட்டு் போனது. பந்த் காரணமாக பகல் காட்சிகள் எதுவும் ஓடவில்லை. மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டுமே ஓடின.
பெரும்பாலான பகுதிகளில்...
பெங்களூரு மட்டுமல்லாமல் மைசூர் உள்ளிட்ட தென் கர்நாடகப் பகுதிகளிலும் நேற்று இதே நிலைதான் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேசமயம், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கம் போல காட்சிகள் இருந்தன.
அலை மோதிய கூட்டம்...
இன்று அனைத்துத் தியேட்டர்களிலும் படம் நல்ல கூட்டத்துடன் ஓடுகிறதாம். எனவே இன்று நல்ல வசூலைப் பெறலம் என்ற நம்பிக்கை காணப்படுகிறதாம். இன்று இரு படங்களும் திரையிடப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியது.
கூடுதல் திரைகள்...
காஞ்சனா இன்று 100 திரைகளில் திரையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல கண்மணிக்கு 80 திரைகளாக கூடியுள்ளதாம்.