Don't Miss!
- News 5 வருடமாக.. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் சரியாக போகுது! கன்னி ராசியை புரட்டி போடும் குரு பெயர்ச்சி.. பலன்
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Technology பட்டிதொட்டியெல்லாம் கலக்கும் BSNL.. மாதம் ரூ.99.. 365 நாள் வேலிடிட்டி.. கம்மி காசில் ஓஹோனு நன்மை..
- Finance அமெரிக்கா தொட முடியாத உயரத்தை இந்தியா தொட்டது.. பங்குச்சந்தையில் புதிய மாற்றம்..!!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஹார்ட்-அட்டாக்! பெங்களூர் மருத்துவமனையில் அனுமதி
பெங்களூர்: கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் மாரடைப்பு காரணமாக பெங்களூர் மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கன்னட ஜாம்பவான் நடிகர் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார். கன்னட திரையுலகில் நம்பர்-1 நடிகராக வலம் வந்துகொண்டுள்ளார்.
50 வயதை கடந்த சிவராஜ்குமாருக்கு இன்று காலை, திடீரென வலது நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆஞ்சியோகிராம் மூலம் அவரை பரிசோதித்த டாக்டர்கள், லேசான ஹார்ட்-அட்டாக்கில் சிவராஜ்குமார் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே அறுவை சிகிச்சை தேவையில்லை எனவும், மருந்துகள் மூலம் இதை சரி செய்ய முடியும் என்றும் டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
மறைந்த நடிகர் ராஜ்குமாருக்கும் இதய பிரச்சினை இருந்தது. எனவே அவரது மகனுக்கும், மரபு மூலம் அந்த பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று மல்யா மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். இன்னும் இரு நாட்களுக்கு சிவராஜ்குமார் மருத்துவமனையில் ஓய்வெடுக்க உள்ளார்.
சிவராஜ்குமாருக்கு, ஹார்ட் அட்டாக் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், ரசிகர்கள் மருத்துவமனை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். சிவராஜ்குமார், நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், பிரபு உள்ளிட்டோருடன் மிக நெருக்கமாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.