Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை.. பிரச்சினை முடியாவிட்டால் வழக்கு!- கார்த்திக்
சென்னை: சொத்துப் பிரச்சினையை தனது சகோதரர் இன்னும் இரண்டு நாளில் முடிக்காவிட்டால் வழக்குத் தொடரப் போவதாக நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
நடிகர் கார்த்திக்குக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வருகிறது.
இப்பிரச்னை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக சமீபத்தில் சென்னை, தேனாம்பேட்டை போலீசில் நடிகர் கார்த்திக் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில் அவர், ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்தில் எனக்கு எதுவும் பங்கு கிடையாது என்கிறார் எனது சகோதரர் கணேசன். மேலும் என்னை வீட்டைவிட்டு வெளியேறும்படியும் கூறுகிறார். மேலும் உயிலில் எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன், என கூறி இருந்தார். உடனே கார்த்திக் மீது அவரது அம்மா சுலோசனாவே ஒரு புகார் கொடுத்திருந்தார்.
இந்த சமயத்தில், தனது குடும்ப விவகாரம் தொடர்பாக வெளியாகி வரும் செய்திகள் பற்றி செய்தியாளர்களுக்கு கார்த்திக் நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது கூறுகையில், "போயஸ் கார்டனில் இருக்கும் வீடு தொடர்பாக எனக்கும் என் சகோதரர் கணேசனுக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது. அந்த இடத்தில் அப்பாட்மென்ட்ஸ் போல் கட்டி, இருவரும் வசிக்கலாம் என நான் கூறினேன். ஆனால் அதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். தொடர்ந்து பிரச்னையை முடிக்கவும் அவர் தயாராக இல்லை. இன்னும் இரண்டு நாட்களில் பிரச்னையை முடிக்க அவர் முன்வராவிட்டால் சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன். மற்றபடி, நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுவது உண்மையல்ல. நானும் அதே வீட்டில் தான் இப்போது வரை இருந்து வருகிறேன்," என்றார்.
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
இஷ்டத்துக்கு பேசிய பேரரசு.. மேடையிலேயே தரமான பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. செம சம்பவம்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!