Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கத்தி விழாவை எதிர்த்துப் போராடிய வேல்முருகன், மாறன் உள்ளிட்ட 500 பேர் கைது
லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தடுத்து நிறுத்தக் கோரி போராடிய 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கத்தி படப் பாடல் வெளியீட்டுக்கு எதிராகவும், கத்தி திரைப்படத்தை தடை செய்யக் கோரியும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பினர் சார்பில் வியாழக்கிழமை அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்ற லீலா பேலஸ் ஹோட்டலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த லைக்காவின் ‘கத்தி' விளம்பரப் பதாதைகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. லைக்கா நிறுவனர் சுபாஸ்கரன், நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலர் கோவை ராமகிருஷ்ணன், , புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை மூர்த்தி, தமிழ்தேச விடுதலை இயக்கத் தலைவர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தபசி குமரன், தமிழர் முன்னேற்றப் படை தலைவி வீரலட்சுமி, முற்போக்கு மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.