Don't Miss!
- News தலைநிமிருது தருமபுரி.. அங்கே மலை உச்சியில் யாரு? கலெக்டர் சாந்தி? தர்மபுரி மலை கிராமம் குஷி.. சபாஷ்
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
விஜய் ஒன்னு சொன்னார், போராட்டக்காரங்க ஒன்னு சொன்னாங்க: தியேட்டர் உரிமையாளர்கள் குழப்பம் தீர்ந்தது
சென்னை: கத்தி விஷயத்தில் தியேட்டர் உரிமையாளர்களின் குழப்பம் தீர்ந்துள்ளது.
விஜய் நடித்துள்ள கத்தி படத்தை வெளியிட சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து படத்தின் விளம்பரங்களில் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனத்தின் பெயரை நீ்க்கிவிடுமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார். அவரது அறிவுரையை ஏற்று லைக்காவின் பெயரை நீக்க ஒப்புக் கொண்டுவிட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது. இந்த பிரச்சனை தீர ஆதரவளித்த அம்மாவுக்கு நன்றி என்று விஜய் அறிக்கை வெளியிட்டார். ஆனால் பெயரை நீக்க லைக்கா ஒப்புக் கொள்ளவில்லை என தமிழ் அமைப்புகள் தெரிவித்தன.
இதற்கிடையே கத்தியை ரிலீஸ் செய்ய விடவே மாட்டோம் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்தார். கத்தி பிரச்சனை தீர்ந்துவிட்டது என்று விஜய் தெரிவித்தது, போராட்டக்காரர்கள் வேறுவிதமாக கூறியது ஆகியவற்றால் என்ன செய்வது என்று தெரியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் தான் கடும் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் போராட்டக்காரர்களிடமே கடிதம் அளித்துள்ளதால் பிரச்சனை தீர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள் தெளிவடைந்துள்ளனர்.