Don't Miss!
- News டிஎன்பிஎஸ்சி அதிரடி.. குரூப் 1 டூ குரூப் 4 வரை முக்கிய தேர்வு தேதிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கலாபவன் மணி மரணம்: விசாரிக்க மறுத்த சிபிஐ, அதிரடி 'ஆர்டர்' போட்ட ஹைகோர்ட்
திருவனந்தபுரம்: நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த கலாபவன் மணி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தார் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியின் நண்பர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
மது
கலாபவன் மணி அருந்திய மதுவில் விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அவரின் மனைவியும், சகோதரரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சிபிஐ விசாரணை
கலாபவன் மணி இறந்து ஓராண்டுக்கு மேல் ஆன பிறகு அவரின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோர்ட்
சிபிஐ ஒரு மாதத்திற்குள் கலாபவன் மணியின் மரணம் குறித்து விசாரணையை துவங்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மணியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கேரள அரசு தெரிவித்திருந்தது.
சிபிஐ
மணியின் மரணம் குறித்து விசாரிக்க சிபிஐ முன்பு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கேரள மாநிலத்தில் தாங்கள் பல வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருவதால் மணியின் வழக்கை ஏற்க முடியாது என்று முன்பு சிபிஐ தெரிவித்த நிலையில் கேரள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.