Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'கத்தி'யை எதிர்ப்பதை விட்டுட்டு வேறு வேலை இருந்தா பாருங்கய்யா: குஷ்பு
சென்னை: கத்தி படத்தை எரித்து போராட்டம் நடத்துபவர்கள் வேறு வேலையை பார்க்குமாறு நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில் கத்தி படத்தின் பெயரை தெரிவிக்காவிட்டாலும் அவர் அதை தான் குறிப்பிடுகிறார்.
விஜய் நடித்துள்ள கத்தி படத்தை தயாரித்துள்ள சுபாஷ்கரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இலங்கையில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ஒருவருக்கு நெருக்கமானவர் தயாரித்த படம் என்பதால் கத்திக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
Everytime a film is releasing,sum fringe group latches on2 it only 2 b seen n heard as they r aware otherwise no 1 cares..find better jobs.
— khushbusundar (@khushsundar) October 21, 2014
பிரச்சனையை தவிர்க்க பட விளம்பரங்களில் இருந்து சுபாஷ்கரன் மற்றும் அவரின் லைகா நிறுவன பெயரை நீக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தினார்.
இந்நிலையில் இது குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ஒவ்வொரு முறையும் ஒரு படம் ரிலீஸாகும்போது சில அமைப்புகள் அதை எதிர்க்கின்றன. அவர்கள் இவ்வாறு செய்வதே அவர்களை பற்றி பிறர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான். இல்லை என்றால் அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். வேறு வேலை இருந்தால் பாருங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.