Don't Miss!
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- News தமிழ்நாட்டில் பாஜக வலுவாகிறது.. தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது.. பிரதமர் மோடி
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Automobiles பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
கிடாரி... சசிகுமாருக்கு ஏன் இந்த கொலவெறி? #Kidaari
'அடுத்த நிமிடம் எங்கே நம் கழுத்து அறுபட்டு விடுமோ என்ற அச்சத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது... படம் முடிந்து வெளியில் வரும்போதும் மூக்கிலிருந்து ரத்த வாடை அகலாத மாதிரியே இருக்கு...'
- சசிகுமாரின் கிடாரி பார்த்துவிட்டு ரசிகர்கள் சொன்ன கமெண்ட் இது.
'படத்தின் ஆரம்பம் தொடங்கி, இறுதி வரை பத்து நிமிடத்துக்கு ஒரு கொலையும் ரத்தச் சகதியுமாகச் செல்கிறது படம். கொடூரம், வன்முறை, அதனூடே சில சென்டிமென்ட் மற்றும் காதல் காட்சிகள்.... இதையே தனது பார்முலாவாக வைத்துக் கொண்டிருக்கிறார் சசிகுமார். இந்தப் படத்தோடு இந்தப் பார்முலாவுக்கு குட்பை சொல்லாவிட்டால், சசிகுமார் நிலை ரொம்ப கஷ்டம்தான்...'
- இதுவும் படம் பார்த்த ஒரு ரசிகனின் கருத்துதான்.
சுப்பிரமணியபுரம், போராளி, குட்டிப் புலி, சுந்தரபாண்டியன் என சசிகுமார் முன்பு நடிக்க எல்லாப் படங்களின் காட்சிகளும் இந்தப் படத்தில் ஏதோ ஒரு இடத்தில் எட்டிப் பார்ப்பது மகா அலுப்பாக உள்ளது.
கிராமங்களில் எத்தனை எளிய வாழ்க்கை இருக்கிறது.. அழகான காதல்... அருமையான நகைச்சுவைகள் கிடக்கின்றன. ஆனால் கிராமத்து மனிதர்கள் சதா ரத்தச் சேற்றில் உழன்று கொண்டிருப்பதாகத்தான் இந்த கிடாரி சித்தரிக்கிறது.
கிட்டத்தட்ட 250 அரங்குகளில் வெளியான கிடாரி மீது ஓரளவு எதிர்ப்பார்ப்பு இருந்தது உண்மைதான். ஆனால் முதல் காட்சி முடிந்ததுமே 'அந்த ஆபத்தான மிருகம் இதுதான்.. ஓடிடுங்க' எனும் ரீதியில் சமூக வலைத் தளங்களில் கமெண்டுகள் குவிய, இன்று சனிக்கிழமை கூட எளிதாக டிக்கெட் கிடைக்கும் நிலைதான் இந்தப் படத்துக்கு உள்ளது என்கிறது கோலிவுட் பாக்ஸ் ஆபீஸ்.