Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance சென்னை-க்கு ஓடி வந்த அம்பானி..! புதிய பிஸ்னஸ், சியோமி உடன் போட்டியா..?
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கவர்னராக கிரண் பேடி பதவியேற்பது ஓ.கே... அதுக்கு எதுக்கு, ரஜினி, விஜய்க்கு அழைப்பு?
பாண்டிச்சேரி: புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவி ஏற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொள்ள நடிகர்கள் ரஜினி, விஜய்க்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இவர்களை பாஜகவுக்கு இழுக்க இன்னும் கட்சி மேலிடம் துடிப்பதையே இது காட்டுவதாக தெரிகிறது.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான புதிய ஆட்சி அமைய உள்ளது. முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகளில் ஒருவரான கிரண்பேடி புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். (கிரண்பேடி இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி - பாஜகவின் டெல்லி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு படு தோல்வியைச் சந்தித்தவரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.)
இன்று மாலை 6.30 மணிக்கு கிரண்பேடி புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்றுக் கொள்கிறார். இதனால் ஆளுநர் மாளிகையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன.
இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் இருவருக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிரண் பேடி சார்பாக இந்த அழைப்பிதழை ரஜினி மற்றும் விஜய் இருவரின் வீடுகளிலும் நேரில் வந்து வழங்கியிருக்கின்றனர். எதற்காக இவர்களை அழைத்துள்ளனர் என்று தெரியவில்லை. ரஜினியை பாஜகவுக்கு இழுக்க ஒரு கட்டத்தில் தீவிரமாக முயன்று பார்த்தனர். தலைகீழாக நின்று பார்த்தனர் முடியவில்லை.
அதேபோல விஜய்யையும் இழுக்கப் பார்த்தனர். அதுவும் சரிப்பட்டு வரவில்லை.
இந்த நிலையில் பாஜக சார்பில் களம் கண்டு தோல்வியுற்றவரான கிரண் பேடி விருப்பத்தின் பேரில் இந்த இரண்டு பேரையும் அழைத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் இவர்கள் போவார்களா என்றுதான் தெரியவில்லை.