Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தீபாவளி ஸ்பெஷல்.... கொடி எப்படி இருக்கு?
தொடர்ந்து மூன்று தோல்விகளால் நெருக்கடியில் இருந்த தனுஷ், மிகவும் எதிர்ப்பார்ப்புடன் ரிலீஸ் செய்திருக்கும் படம் கொடி.
இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று ஊர் ஊராக ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் தனுஷ்.
படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கே ஆரம்பித்துவிட்டது. முதல் காட்சி முடிந்த கையோடு ரசிகர்களின் ரியாக்ஷன்களும் வந்துவிட்டன.
என்ன சொல்கிறார்கள் கொடி படம் பற்றி...?
'கொடி படம் சரியான நேரத்தில் பட்டாசாக வந்திருக்கிறது. தனுஷும் த்ரிஷாவும் கலக்கி இருக்கிறார்கள்' - இதுதான் பெரும்பான்மையோரின் கருத்தாக உள்ளது.
இடைவேளை வரை படம் வித்தியாசமாகச் செல்வதாகவும், இடைவேளைக்குப் பிறகு வழக்கமான பாணியில் இருந்தாலும் ரசிக்கும்படி உள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
த்ரிஷாவின் வேடம் மிகவும் சவாலானது... ஆனால் அதை அவர் பிரமாதமாகக் கையாண்டுள்ளார் என்று பாராட்டியுள்ளனர். இன்னும் சிலர் த்ரிஷாவைக் கடுமையாகக் குறை கூறியும் உள்ளனர். நல்ல வேடம்... அவரால் சிறப்பாக செய்ய முடியவில்லை, என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசியல்வாதி கெட்டப்பில் தனுஷ் அசால்டாக கலக்கியுள்ளார். ஆள் ஒல்லி என்றாலும், கெட்டப்பில் கில்லி என்று வெகுவாகப் புகழ்ந்துள்ளனர் பெரும்பாலான ரசிகர்கள்.
ஆக, தனுஷுக்கு இது ஒரு பெரிய ஆறுதலைத் தந்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் முதல் தகவல் தந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமைதான் உண்மையான நிலவரம் தெரியவரும்.