Don't Miss!
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யார் முதல்வராக வந்தாலும் ஒரு கேக் வெட்டிடுவோம்! - இதான் கோலிவுட் நிலவரம்
சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி அமைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தேர்தல் முடிந்ததுமே அடுத்து யார் முதல்வராக வந்தாலும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நாளிதழ்களில் ஒரு விளம்பரம், அவர்களின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் தத்தமது சங்கங்களில் ஒரு கேக் வெட்டுவது என முடிவு செய்து வைத்திருந்தார்களாம் திரையுலகினர்.
தேர்தல் நாள் வரை அதிமுகதான ஜெயிக்கும் என நம்பிய இவர்களில் சிலர், தேர்தல் முடிந்ததும் திடீரென திமுக ஆதரவு மனநிலைக்குத் திரும்பிவிட்டனர். திமுகதான் ஜெயிக்குமாமே? நிஜமா? என்று ஆளாளுக்கு கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
சிலர் இன்று பிற்பகலில் திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் முக ஸ்டாலினையும் சந்திக்க நேரம் கூட வாங்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இப்போது தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு சாதகமாக வந்துவிட்டதால், நாளிதழ் விளம்பரம், கேக் வெட்டும் நிகழ்வை இன்று மாலையே செய்யவிருக்கிறார்களாம்.
இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு வெளிப்படையான ஆதரவைத் தந்தது திரையுலகின் பெரிய தொழிலாளர் அமைப்பான ஃபெப்சி என்பது குறிப்பிடத்தக்கது.