Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
போதைக்கு அடிமை, பலமுறை தற்கொலைக்கு முயன்றார் நடிகை க்ரித்திகா: தோழி பரபர பேட்டி
மும்பை: நடிகை க்ரித்திகா சவுத்ரியின் திருமண வாழ்க்கை கசந்து போன பிறகு அவர் போதைப் பொருளுக்கு அடிமையானதாகவும், பலமுறை தற்கொலைக்கு முயன்றதாகவும் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடிகை க்ரித்திகா சவுத்ரி மும்பையில் உள்ள தனது அபார்ட்மென்ட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை யாரோ தலையில் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து க்ரித்திகாவின் தோழி ஒருவர் கூறியிருப்பதாவது,
காதல்
க்ரித்திகா டெல்லியில் வேலை செய்தபோது தன்னுடன் பணியாற்றிய ஒருவரை காதலித்தார். அவர்கள் திருமணம் செய்ய தீர்மானித்தபோது தான் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமானது க்ரித்திகாவுக்கு தெரிய வந்தது.
திருமணம்
அந்த நபர் தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு க்ரித்திகாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு அவர்கள் மும்பைக்கு வந்தனர். அந்த நபர் க்ரித்திகாவுக்கு துரோகம் செய்தார்.
பிரிவு
க்ரித்திகா தனது கணவர் மீது போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவர் தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு நான் மாடலிங் வேலை கொடுத்தேன். அவர் போதைப் பொருளுக்கு அடிமையானதை கண்டுபிடித்தேன்.
வேண்டாம்
போதைப் பொருள் பயன்படுத்தாதே அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது இல்லை என்று நான் க்ரித்திகாவை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. போதைப் பொருள் இல்லாமல் அவரால் இருக்க முடியாது.
தற்கொலை
க்ரித்திகா பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது இடது கையில் பிளேடால் கீரிய அடையாளம் நிறைய இருக்கும். அவர் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்ததால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தாரா என தெரியவில்லை.
டெல்லி
நான் தற்போது டெல்லியில் வசித்து வருகிறேன். க்ரித்திகாவுடன் பேசி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. போலீசார் என் வீட்டை தேடி வந்தபோது தான் க்ரித்திகாவின் விவகாரம் தெரிய வந்தது என்றார் அந்த தோழி.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்