Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சின்னத்திரை நடிகர் சங்கம்: வளர்ச்சிக்காக நன்கொடைகளை அள்ளி வழங்கிய ஜே.கே.ரித்தீஷ், குஷ்பூ
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக நடிகை குஷ்பூ, ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
நடிகர் சங்கத்துக்கான தேர்தல் சமீபத்தில் முடிந்த நிலையில் புதிய உறுப்பினர்களின் அறிமுக கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.
இதில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சுஜாதா, செயலாளர் குஷ்பு, டைரக்டர்கள் கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி மற்றும் சங்க நிர்வாகிகள், சின்னத்திரை நடிகர், நடிகைககள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.தொடர்ந்து சின்னத்திரை நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக ரூ.5 லட்சத்தை ஜே.கே.ரித்தீஷும், ரூ 1 லட்சத்தை நடிகை குஷ்பூவும் வழங்கினர்.
மேலும் நலிவடைந்த சின்னத்திரை கலைஞர்களுக்கு பல்வேறு உதவிகளும் இந்த விழாவில் வழங்கப்பட்டன.
விழாவில் பேசிய குஷ்பூ "நான் எப்போதும் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு துணையாக இருப்பேன். இந்த சங்கத்தின் மூலம் பல்வேறு உதவிகளை செய்வேன்" என்று உறுதி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் சின்னத்திரை சங்க கட்டிடம் கட்டுவது, சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ வசதி, உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்குவது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.