Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தேசிய விருது, சூப்பர்ஸ்டார் பாராட்டு: குஷியில் குற்றம் கடிதல் படக்குழு
சென்னை: தேசிய விருது, சூப்பர் ஸ்டார் வாழ்த்துடன் குற்றம் கடிதல் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
பிரம்மா இயக்கிய குற்றம் கடிதல் படம் பற்றி பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான் அந்த படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. விருது அறிவிக்கப்பட்ட உடன் தான் பலரும் குற்றம் கடிதலா அப்படி ஒரு படமா என்று அவசர, அவசரமாக கூகுளில் தேடினர்.
கூகுள் செய்த பிறகே பலருக்கும் அப்படி ஒரு படம் ரிலீஸாக காத்திருக்கிறது என்பது தெரிய வந்தது.
புதுசு
என்னப்பா, படத்தில் யாரும் தெரிந்த முகமே இல்லையே, அப்படி இருந்தும் தேசிய விருதா, அப்படி என்றால் நிச்சயம் விஷயம் இருக்கும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர்.
தியேட்டர்
காரணம் இல்லாமல் தேசிய விருது அளிக்க மாட்டார்கள். படம் ரிலீஸாகட்டும் அதில் என்ன இருக்கிறது என தியேட்டருக்கு சென்று பார்த்துவிட வேண்டும் என்று பலரும் முடிவு செய்துள்ளனர்.
ரஜினி
விருது செய்தி அறிந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனர் பிரம்மாவுக்கு போன் போட்டு பாராட்டியுள்ளார். மேலும் தான் படத்தை விரைவில் பார்க்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குஷி
ஒரு பக்கம் தேசிய விருது, மறுபக்கம் சூப்பர் ஸ்டாரின் வாழ்த்தால் படக்குழுவினர் குஷியில் உள்ளனர். படம் நிச்சயம் மக்களை சென்றடையும் என்று அவர்கள் தீர்க்கமாக நம்புகிறார்கள்.