Don't Miss!
- News "சுயமரியாதை" தான் முக்கியம்.. பாஜகவில் எழுந்த குரல்.. குஜராத் எம்எல்ஏ திடீர் ராஜினாமா! என்ன நடந்தது
- Finance பெங்களூர்: அடுத்த பத்தாண்டுக்குள் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதாம்!
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
ஒரே இரவில் 3 கோலிவுட் பிரபலங்களின் வீட்டில் நடந்த துக்க சம்பவம்
சென்னை: திங்கட்கிழமை இரவு மட்டும் கோலிவுட் பிரபலங்கள் மூன்று பேர் தங்களின் உறவுகளை இழந்துள்ளனர்.
கோலிவுட் பிரபலங்களான இயக்குனர் கே.வி. ஆனந்த், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நடிகர் சூரி ஆகியோர் தங்கள் உறவுகளை இழந்துள்ளனர். நேற்று இரவு அந்த மூன்று பேரின் வீட்டிலும் மரணம் நிகழ்ந்துள்ளது.
அவர்களுக்கு தமிழ் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
நடிகர் சூரி
நடிகர் சூரியின் தந்தை முத்துசாமி உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 75. அவர் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே உள்ள ராஜாக்கூரில் வசித்து வந்தார்.
கே. வி. ஆனந்த்
இயக்குனர் கே.வி. ஆனந்தின் தந்தை கே. எம். வெங்கடேசன்(74) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.
கவண்
விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியனை வைத்து கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள கவண் படம் வரும் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீர்காழி சிவசிதம்பரம்
மறைந்த பாடகர் சீர்காழி கோவிந்தராஜனின் மனைவியும், சீர்காழி சிவசிதம்பரத்தின் தாயுமான அவயாம்பாள் சுவாச கோளாறால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 80.