Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
துன்புறுத்தப்பட்ட நடிகைக்கு பக்க பலமாக நின்ற இயக்குநர்!
கடத்தல், பாலியல் தொல்லைக்கு ஆளான பாவனாவுக்கு இக்கட்டான நேரத்தில் பக்க பலமாய் இருந்து போலீஸ் நடவடிக்கை எடுக்க உதவி செய்துள்ளார் நடிகரும் இயக்குநருமான லால்.
லால் தமிழில் 'சண்டைக்கோழி', 'தீபாவளி' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தீபாவளி' படத்தில் நடிகை பாவனாவுக்கு அவர் தந்தையாக நடித்திருந்தார்.
பாவனா தன்னிடம் உதவி கேட்டு வந்த சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "இது ஒரு மோசமான, மனிதத் தன்மையற்ற சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று இரவு எனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமைப் பற்றி பாவனா கூறியபோது அதிர்ந்து போனேன். இதுபற்றி கேரள டி.ஜி.பி.யைத் தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை எனது வீட்டிற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார்.
மறுநாள் இந்த சம்பவம் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனால் பாவனா மிகவும் மனவேதனை அடைந்தார். புகாரை வாபஸ் வாங்கி விடலாம் என்றுகூட நினைத்தார். ஆனால் அவரிடம் போலீஸ் டி.ஜி.பி. இதுபோல 3 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இந்த புகார் மூலம் உங்களுக்கு சிக்கல் வராது.. குற்றவாளிகளையும் பிடித்து தண்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
இதன்பிறகே அவர் சமாதானமடைந்தார். இந்த கொடிய செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாவனாவுக்கு முழுப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்," என்றார்.