Don't Miss!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Sports ஹர்திக் vs ரோகித் - எங்க அணியில் விரிசல் இல்லை.. வீடியோ வெளியிட்டு சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ்
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- News முருகனை அடுத்து மாரியம்மன் வழிபாட்டில் வள்ளிக் கும்மி… காரணம் என்ன?
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
துன்புறுத்தப்பட்ட நடிகைக்கு பக்க பலமாக நின்ற இயக்குநர்!
கடத்தல், பாலியல் தொல்லைக்கு ஆளான பாவனாவுக்கு இக்கட்டான நேரத்தில் பக்க பலமாய் இருந்து போலீஸ் நடவடிக்கை எடுக்க உதவி செய்துள்ளார் நடிகரும் இயக்குநருமான லால்.
லால் தமிழில் 'சண்டைக்கோழி', 'தீபாவளி' உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தீபாவளி' படத்தில் நடிகை பாவனாவுக்கு அவர் தந்தையாக நடித்திருந்தார்.
பாவனா தன்னிடம் உதவி கேட்டு வந்த சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "இது ஒரு மோசமான, மனிதத் தன்மையற்ற சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று இரவு எனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமைப் பற்றி பாவனா கூறியபோது அதிர்ந்து போனேன். இதுபற்றி கேரள டி.ஜி.பி.யைத் தொடர்பு கொண்டு புகார் செய்தேன். அவர் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளை எனது வீட்டிற்கு அனுப்பி நடவடிக்கை எடுத்தார்.
மறுநாள் இந்த சம்பவம் பற்றி ஊடகங்களில் தகவல் வெளியானது. இதனால் பாவனா மிகவும் மனவேதனை அடைந்தார். புகாரை வாபஸ் வாங்கி விடலாம் என்றுகூட நினைத்தார். ஆனால் அவரிடம் போலீஸ் டி.ஜி.பி. இதுபோல 3 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இந்த புகார் மூலம் உங்களுக்கு சிக்கல் வராது.. குற்றவாளிகளையும் பிடித்து தண்டிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.
இதன்பிறகே அவர் சமாதானமடைந்தார். இந்த கொடிய செயலில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாவனாவுக்கு முழுப் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்," என்றார்.