Don't Miss!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வேல்ஸ், எம்ஜிஆர் பல்கலை.களில் நடிகர் சங்க உறுப்பினர்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி!
சென்னை: வேல்ஸ் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக் கழகங்களில் நடிகர் சங்க உறுப்பினர்களின் வாரிசுகள் 36 பேருக்கு அவர்கள் விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்து படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு வழங்கப்படும் என நடிகர் சங்கம் ஏற்கனவே கூறியிருந்தது.
இப்போது நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 36 பேருக்கு அவர்கள் கேட்ட பாடங்களை படிக்க நடிகர் சங்கம் மூலமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அக்குழந்தைகள் அனைவரும் அவர்கள் விரும்பிய பாடங்களை படிக்க வாய்ப்பளித்த வேல்ஸ் பல்கலைகழகம் வேந்தர் ஐசரி கணேசன், மற்றும் எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் வேந்தர் ஏ.சி.சண்முகம் ஆகியோர்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
மாணவர்களைச் சந்தித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் ஆசைப்பட்டது போலவே விரும்பிய பாடத்தைப் படிக்க அனைவருக்கும் கல்லூரி சீட் கிடைத்ததில் நடிகர் சங்க நிர்வாகிகளாகிய எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. நீங்கள் அனைவரும் நன்றாகப் படித்து பெரிய அளவில் சாதித்து பெற்றோருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதைத் தவிர்த்து நீங்கள் சாதைனை புரிந்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் அதேபோல் இலவச கல்வி வழங்கிய நிர்வாகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்," என அறிவுரை வழங்கினார்.