Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கத்தி திட்டமிட்டபடி தீபாவளியன்று ரிலீஸ்! - லைகா நிறுவனம்
கத்தி ரிலீஸ் பிரச்சினை இன்று சுமூகமாக முடியும் என லைகா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
லைகா நிறுவனத்தின் கத்தி படத்தை தீபாவளிக்கு வெளியிடுவதை தமிழ் அமைப்புகள், திருமாவளவன் மற்றும் மாணவர் அமைப்புகள் எதிர்த்து வருகின்றன.
படம் வெளியாகும் தியேட்டர்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு தேதியும் வெளியான நிலையில், எதிர்ப்பு நிலையிலிருந்து போராட்டக்காரர்கள் பின்வாங்கவில்லை.
இந்த நிலையில் படத்தை சுமுகமாக வெளியிட, தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்ங்கரன் கருணாமூர்த்தியுடன் கடந்த இரு தினங்களாக சென்னை போலீஸ் கமிஷனர் பேச்சு நடத்தி வருகிறார்.
இதுகுறித்து லைகா நிறுவனத் தரப்பில் விசாரித்தபோது, 'படம் நிச்சயம் வெளியாகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இன்று அனைத்து விஷயங்களும் சுமூகமாக முடிந்துவிடும். ரிசர்வேஷன் விரைவில் தொடங்கும்,' என்று தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 400 அரங்குகளில் கத்தி வெளியாகிறது.
வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் அதிக அரங்குகளில் படம் வெளியாகிறுது. அதற்கான பிரதிகள் நேற்று மாலையே அனுப்பப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.