Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
போயஸ் கார்டனில் ரஜினியை சந்திக்கும் மலேசிய பிரதமர்: வீடு தேடி வரும் பதவி?
சென்னை: இந்தியா வரும் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்திக்க உள்ளாராம்.
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் 5 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சூரும் வருகிறார். நஜீபும், ரோஸ்மாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள்.
இதையடுத்து இந்திய பயணத்தின்போது ரஜினியை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து மலேசிய அதிகாரிகள் ரஜினியை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
நஜீபும், அவரது மனைவியும் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசக்கூடும் என்று கூறப்படுகிறது. மலேசியாவில் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.
இந்நிலையில் மலேசிய சுற்றுலாத் துறை அம்பாசிடராக ரஜினியை நியமிக்க அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து மலேசிய சுற்றுலாத் துறை அம்பாசிடராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.