Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'பொறந்தது பனையூரு மண்ணு' பாட்டுபாடி, மருதநாயகம் அறிவிப்பை வெளியிட்ட கமல்-இளையராஜா
சென்னை: விஜய் டிவியின் இளையராஜா 1௦௦௦ நிகழ்ச்சியில், மருதநாயகம் படத்தின் அறிவிப்பை, பாட்டுப்பாடி இளையராஜா, கமல் இருவரும் அறிவித்தனர்.
கடந்த 27 ம் தேதி இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக இளையராஜா 1௦௦௦ நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பாடகர்கள் மனோ, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், பஞ்சு அருணசாலம், கமல்ஹாசன் மற்றும் பாக்யராஜ் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
இளையராஜா
சமீபத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ மாவது படமாக அமைந்தது. இதன் மூலம் திரையுலகில் 1௦௦௦ படங்களுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமை இசைஞானிக்கு கிடைத்தது.
இளையராஜா 1௦௦௦
இதன் பொருட்டு இசைஞானியைக் கவுரவிக்கும் விதமாக விஜய் டிவி 'இளையராஜா 1௦௦௦' என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நேற்று முன்தினம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மனோ, சித்ரா
இந்த விழாவில் பாடகர்கள் மனோ, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு இளையராஜாவின் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாக்யராஜ், பஞ்சு அருணாசலம் ஆகியோரும் இளையராஜா குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை.
மருதநாயகம்
விழாவின் இறுதியில் பேசிய கமல்-இளையராஜா இருவரும், 'மருதநாயகம் படம் மீண்டும் தொடங்கப்படும்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் அந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட 'பொறந்தது பனையூரு மண்ணு' என்ற பாடலை இருவரும் இணைந்து பாடினர். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
லைகா
ஏற்கனவே லைகா நிறுவனத்துடன் 2 படங்கள் பண்ணுகிறேன், அவற்றில் மருதநாயகமும் உண்டு என்று கமல்ஹாசன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினி-அக்ஷய்குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உருவாகும் 2.0 படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!