Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நடிகைக்கு கேரளாவில் மருத்துவ பரிசோதனை... நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம்
கொச்சி: கார் டிரைவர் மற்றும் சிலரால் கடத்தில் மானபங்கப்பட்டுத்தப்பட்ட நடிகைக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிரபல கதாநாயகியாக இருக்கும் நடிகை ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷூட்டிங்கிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, அவரது முன்னாள் டிரைவர் சுனில்குமார் திட்டமிட்டு ஆள் வைத்துக் கடத்தி, காரிலேயே 2 மணி நேரம் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்த மார்ட்டின் உள்ளிட்ட மூவரை கேரள போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி காளமேச்சேரி பெண் நீதிபதியிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்கு மூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடிகைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. காளமேச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்த பரிசோதனைகள் நடந்தன.