Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
உதவி இயக்குனருக்கு பளார் கொடுத்த மீனாட்சி... சிறைபிடித்த படக்குழுவினர்
சென்னை: படப்பிடிப்பில் உதவி இயக்குனரை நடிகை மீனாட்சி ஓங்கி அறைந்த சம்பவம் சினிமாவுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழில் கருப்பசாமி குத்தகைதாரர் படத்தின் மூலம் அறிமுகமான மீனாட்சி தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப் புன்னகை போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது நேர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். நேற்று இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது உதவி இயக்குநர் ஒருவரை நடிகை மீனாட்சி ஓங்கி அறைந்திருக்கிறார்.
இவர் அறைந்த வேகத்தில் அந்த உதவி இயக்குநர் மயக்க நிலைக்குச் சென்றுவிட அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் மீனாட்சி மன்னிப்பு கேட்கும்வரை அவரை விடமாட்டோம் என்று கூறி அவரை சிறைபிடித்தனர்.
கடைசியில் நடிகை மீனாட்சி மன்னிப்புக் கடிதம் எழுதி படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்ட பின்னரே அவரை படக்குழுவினர் விடுவித்து இருக்கின்றனர்.
இவர் அறைந்ததில் மயங்கி விழுந்த உதவி இயக்குனருக்கு தற்போது தீவிர சிகிச்சை நடைபெற்று வருகிறதாம்.
நடிகை மீனாட்சி உதவி இயக்குனரை அறைந்த சம்பவமும், அவரை படக்குழுவினர் சிறைபிடித்த சம்பவமும் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.