Don't Miss!
- News மேடையிலேயே நிலைக்குலைந்த நிதின் கட்கரி.. மயங்கி விழுந்ததால் பரபரப்பு.. ஷாக் வீடியோ
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நாயகியின் கண்ணீருடன் வெளியானது மெல்லிசை பாடல்கள்
சென்னை: மெல்லிசை படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.இயக்குநர் ராம், கார்த்திக் சுப்புராஜ், மாகாபா ஆனந்த், இயக்குநர் தாமிரா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்.
விஜய் சேதுபதி - காயத்ரி நடித்திருக்கும் இப்படத்தை இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதியின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் மெல்லிசையும் ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் மாறியிருக்கிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை காயத்ரி பேசும்போது மெல்லிசை படம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும். அதிகமாக எதிர்பார்க்கும் படம் மெல்லிசை, இப்படம் நிச்சயம் எனக்குப் பெரிய பெயர் வாங்கித்தரும்".
என்று சிலவரிகள் பேசியவர் அழ ஆரம்பித்து விட்டார் தொடர்ந்து அவரால் மேலே பேசமுடியவில்லை எனவே அவரது இருக்கைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் நாயகன் விஜய் சேதுபதியும், இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியும் அவரை சமாதானப்படுத்தினர்.இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சிக்கும் கஷ்டப்பட்டு கவனத்துடன் காயத்ரி நடித்திருக்கிறார்.
இவரின் உழைப்பே கண்ணீருக்குக் காரணம் என்று இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி தனது பேச்சின் நடுவே காயத்ரியின் அழுகைக்கான காரணத்தை குறிப்பிட்டார்.
மெல்லிசை படத்தின் இசை மற்றும் பாடல்களை படக்குழுவினர் மேடையில் வெளியிட்டனர். மேலும் நாயகன் விஜய் சேதுபதிக்கு பெரிய மாலை அணிவித்து படக்குழுவினர் அவரை கவுரவித்து மகிழ்ந்தனர்.
விழாவிற்கு பெரிய அரிவாள் மீசையுடன் வந்திருந்த விஜய் சேதுபதி நடிகை காயத்ரியுடன் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் ரம்மி ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்