Don't Miss!
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எம்.எஸ்.விஸ்வநாதன் உடல் நிலையில் முன்னேற்றம்.. டாக்டர்கள் தகவல்
சென்னை: கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
"மெல்லிசை மன்னர்" என அன்போடு அழைக்கப்படுபவர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் சர்க்கரை நோய் மற்றும் வயோதிகத்தால் அவதிப்பட்டு வந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பிறகு அவர் பூரண குணம் அடைந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று அவருக்கு 86 வயது நிறைவடைந்து 87வது வயது பிறந்தது. இந்நிலையில் மூச்சுத்திணறல் காரணமாக அவர் நேற்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக அவருடைய மகன் கோபி, ‘‘வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.