Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆபாச பாடல்களை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும்: கங்கை அமரன்
சென்னை: ஆபாசப் பாடல்களை தொடக்கத்திலேயே அனுமதிக்கக் கூடாது என்று இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்திருக்கிறார்.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடலிற்கு தமிழக மக்களிடையே தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் சிம்பு, அனிருத் இருவருக்கும் கோவை போலீசார் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருக்கின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் பீப் பாடல் விவகாரத்தில் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் ஆபாசமாக ஒரு பாடல் வெளிவந்து உள்ளதாக கோவையில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுபோன்ற ஆபாச வார்த்தைகள் இடம் பெற்ற பாடல்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
ஆபாசம் மற்றும் கொச்சையான வார்த்தைகளுடைய பாடல்கள் ஒரு சில வேளையில் அனுமதிக்கப்பட்டு வெளிவந்து விடுகிறது.
இதனால் வருங்காலங்களில் வெளிவரும் பாடல்களிலும் இதைவிட கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்த வாய்ப்பாகிறது. எனவே ஆபாச பாடலை தொடக்கத்திலேயே அனுமதிக்கக்கூடாது." என்று கங்கை அமரன் கூறியிருக்கிறார்.