Don't Miss!
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் சங்கத்திற்காக விஷால்-கார்த்தியை இயக்கும் முத்தையா?
சென்னை: விஷால்-கார்த்தி இருவரையும் முத்தையா இயக்கப்போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.
கார்த்தியை வைத்து 'கொம்பன்', விஷாலை வைத்து 'மருது' படங்களை இயக்கியவர் முத்தையா. தனித்தனியே இரண்டு பேரையும் இயக்கிய முத்தையாவுக்கு தற்போது ஒரே படத்தில் இருவரையும் இயக்கக் கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.
நடிகர் சங்க கட்டிடத்திற்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.இப்படத்திற்காக பல்வேறு இயக்குநர்களும் கதை சொன்னதில் முத்தையா சொன்ன கதை இருவருக்கும் பொருந்தும்படி இருக்கிறதாம்.
இதனால் இருவரையும் இயக்கும் வாய்ப்பு முத்தையாவுக்கு கிடைக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மருது' சுமாராக ஓடியதால் விக்ரம் பிரபுவை இயக்கும் வாய்ப்பை முத்தையா நழுவ விட்டிருக்கிறார்.
விக்ரம் பிரபுவை இயக்க முடியாவிட்டாலும் கார்த்தி-விஷாலை ஒருசேர இயக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் மனிதர் மகிழ்ச்சியாக காணப்படுகிறாராம்.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவிற்கும், முத்தையா கதையெழுதி வருவது குறிப்பிடத்தக்கது.