Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
டைரக்ஷனுக்கு தயாராக இருந்த நா.முத்துகுமார்!
நேற்று நம்மை தவிக்கவிட்டு மறைந்த நா.முத்துகுமார் சினிமாவுக்கு வந்ததே இயக்குனர் ஆசையுடன் தான். பாலு மகேந்திராவிடன் நான்கு ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் முத்துகுமார்.
ஆனால் சினிமா அவரது கவிதைத்திறமையை கண்டுகொண்டு பாடலாசிரியர் ஆக்கியது. தொடர்ந்து 12 ஆண்டுகள் பாடல்கள் எண்ணிக்கையில் நம்பர் ஒன் அவர் தான். சின்ன படம், பெரிய படம், பிரபலம், அறிமுகம் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் எழுதிக் குவித்தார். அத்தனையும் முத்துகள்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நா.முத்துகுமாருக்கு மீண்டும் இயக்குனர் ஆசை வந்திருக்கிறது. தன் மனதில் நீண்ட நாட்களாக சுழன்றுகொண்டிருந்த பச்சையப்பா கல்லூரி ஸ்க்ரிப்டை கையில் எடுத்தார்.
பச்சையப்பா கல்லூரியில் படிக்கும் மாணவன் ஒருவன் ரவுடியாக திரிந்து, பின்னர் திருந்தி இறுதியில் அந்தக் கல்லூரிக்கே ப்ரின்சிபல் ஆவதுதான் கதையாம். தான் படித்தபோது கண்ட உண்மை சம்பவங்களை கோர்த்து திரைக்கதை பண்ணியிருந்தார்.
அதை படமாக்க விடாமல் செய்துவிட்டது விதி.