Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என் மறைவுக்கு பிறகு என் குடும்பத்தாருக்கு என் பாடல்களின் ராயல்டி கிடைக்கணும்: நா. முத்துக்குமார்
சென்னை: தான் இறந்துவிட்டால் தன் பாடல்களின் ராயல்டி தன் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்று பாடல் ஆசிரியர் நா. முத்துக்குமார் தன்னிடம் தெரிவித்ததாக சக பாடல் ஆசிரியரான மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி பாடல் ஆசிரியராக இருந்த நா. முத்துக்குமார் மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 14ம் தேதி மரணம் அடைந்தார். 41 வயதில் முத்துக்குமார் மரணம் அடைந்ததால் திரையுலகம் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் உள்ளது.
அவரின் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அவர் இறந்ததாக வேறு கூறப்படுகிறது.
முத்துக்குமார்
முத்துக்குமாருக்கு நெருக்கமானவராக இருந்தவர்களில் ஒருவர் பாடல் ஆசிரியரான மதன் கார்க்கி. அவர் முத்துக்குமார் பற்றி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான பாடல்கள் எழுதியவர் அவர் தான். அதில் பெரும்பாலான பாடல்கள் ஹிட் என்றார்.
எளிமை
முத்துக்குமார் தனது பாடல்களில் மிகவும் எளிதான வார்த்தைகளையே பயன்படுத்தி வந்தார். ஆனால் அந்த வார்த்தைகள் பல வகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தின. கடந்த சில மாதங்களாக அவர் ஷங்கரின் 2.0 உள்பட பல படங்களுக்கு பாடல் எழுதி வந்தார் என்றார் மதன் கார்க்கி.
ராயல்டி
பாடல்களுக்கு ராயல்டி வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் முத்துக்குமாரும் ஒருவர். பாடல் ஆசிரியர்களுக்கு ராயல்டி வழங்காமல் இருப்பது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று மதன் தெரிவித்தார்.
மறைவுக்கு பிறகு
ஒரு நாள் நான் இறந்த பிறகு என் பாடல்களின் ராயல்டி என் குடும்பத்தாருக்கு கிடைக்க வேண்டும் என்றார் முத்துக்குமார். அவரின் ஆசை நிறைவேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார் மதன்.