Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அருள்நிதியின் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்திற்கு யு சான்றிதழ்
சென்னை : அருள்நிதி நடித்துள்ள நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
‘வம்சம்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருள்நிதி. இவர் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பேரன். வம்சம் படத்தைத் தொடர்ந்து உதயன், மௌனகுரு, தகராறு, ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் உள்ளிட்ட படங்களில் அருள்நிதி நடித்திருந்தார்.
இவர் தற்போது அறிமுக இயக்குநர் ஸ்ரீ கிருஷ்ணா இயக்கத்தில் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அருள்நிதியின் ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் சிங்கம்புலி, பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
போலீஸ் வேடம்...
நகைச்சுவைப் படமான இதில் அருள்நிதி போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் காப்பரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
யு சான்றிதழ்...
இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வரவேற்பு...
யூடியூபில் வெளியிடப்பட்ட டிரைலருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் ரிலீஸ் ?
இதற்கிடையே, டிரைலருக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இப்படத்தைப் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.