Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.5000 ஓய்வூதியம் அளிப்பதே முதல் கையெழுத்து.. கண்ணீர் விட்ட நாடக கலைஞர்களிடம் பாண்டவர் அணி உறுதி!
திருச்சி: நாங்க ஜெயித்தால் முதல் கையெழுத்து நலிந்த நாடக கலைஞருக்கான ஓய்வூதிய திட்டத்திற்குதான்'' என அதிரடியாக அறிவித்துள்ளது நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணி. திருச்சியில் நடிகர் சங்கத் தேர்தலுக்கு ஆதரவு கேட்கச் சென்ற விஷால் அணியினரிடம் நாடக நடிகர், நடிகை கண்ணீர் விட்டு அழுதனர். இதைப் பார்த்து கண் கலங்கிய விஷால், ''அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதம் 5 ஆயிரம் வீடு தேடி வரும் என்று ஆறுதல் கூறினார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சரத்குமார்- ராதாரவி தலைமையிலான அணியும், நாசர், விஷால், உள்ளிட்ட பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன. இரு அணியினரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாண்டவர் அணியைச் சேர்ந்த நடிகர்கள், நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன், சாந்தனு, நடிகைகள் ரோகினி, குட்டி பத்மினி, கோவை சரளா உள்ளிட்டோர் கடந்த 4 நாட்களாக சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நாடக நடிகர்களை சந்தித்து தங்களின் ஆதரவைத் திரட்டி வருகிறார்கள்.
திருச்சி ஜென்னிஸ் ஹோட்டலில் நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டனர். சரத்குமாருக்கும் எனக்கும் எந்த சொந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் நடிகர் சங்கத் தலைவர். நான் நடிகர். சங்கத் தலைவர், உறுப்பினர் என்கிற முறையில் அவருக்கும் எனக்கும் பிரச்னை... அவ்வளவுதான் என்றார் விஷால்.
ஒரே கேப்டன்தான்
சரத்குமார் செய்த தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்டோம். இப்போது தேர்தல் வரை கொண்டு வந்துவிட்டுள்ளது. நலிவுற்ற கலைஞர்களுக்கு நல்லது செய்ய களத்தில் இருக்கிறோம் என்ற விஷால்.தமிழ் திரையுலகில் ஒரே கேப்டன் விஜயகாந்த்தான். நான் அதற்கெல்லாம் ஆசைப்படவில்லை என்றார். தொடர்ந்து நாடக நடிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கண்கலங்கிய நடிகை
நாடக நடிகை சரண்யா என்பவர், தனக்கு மார்பக புற்று நோய் வந்ததாகவும் சென்னை அடையாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனக்கு உதவி செய்ய சரத்குமார், ராதாரவியிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் எனக்கு 2500 கொடுத்தாங்க. அதுவும் 5 ஆயிரம் கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த அணிதான் எனக்கு 2 லட்ச ரூபாய் செலவில் அரசாங்கம் மூலம் மருத்துவ பரிசோதனை முடிக்க உதவி செய்திருக்காங்க'' என்றார்.
கண்ணீர் விட்ட நடிகர்
கூடவே ஜெகநாதன் எனும் மூத்த நாடக சங்க உறுப்பினர், ''என்னால நடக்க முடியாம கஷ்டப்படுகிறேன். மறைந்த நடிகர் மனோகரன் உள்ளிட்டோரோடு நடித்தவன் நான். மேலும் ராதாரவியோடு நடிச்சிருக்கிறேன். 40 வருடம் சென்னையில் இருந்து நடித்தேன். இப்போ முடியாமல் திருச்சிக்கு வந்துட்டேன். எனக்கு காலில் பிரச்னை. சரிசெய்ய சங்கத்தில் உதவி கேட்டேன். ஆனால் ராதாரவி உனக்கு பிரச்னையா என கேட்டு அனுப்பிவிட்டார்'' என சொல்லும்போது கண்ணீர் விட்டு அழுதார்.
ரூ. 5000 ஓய்வூதியம்
இதைப் பார்த்து கண் கலங்கிய விஷால், ''அடுத்த மாதத்தில் இருந்து உங்களுக்கு மாதம் 5 ஆயிரம் வீடு தேடி வரும். நாங்க ஜெயித்தால் முதல் கையெழுத்து நலிந்த நாடக கலைஞருக்கான ஓய்வூதிய திட்டத்திற்குதான்'' என கூறினார்.
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!