Don't Miss!
- Automobiles உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- Lifestyle Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தலைவர் இல்லாமல் நடக்கிறது, நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது: இளையராஜா கலகல
சென்னை: தலைவர் இல்லாமல் நடக்கிறது. நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது. நாடு அப்படி போவதால் நாமும் நாட்டோடு போவோம். நம்ம இல்லாமல் நாடு இல்லை என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா கவிக்கோ மன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு அவர் தான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் மிகவும் சுவாரஸ்யமாக பேசினார், அருமையாக பாடினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
தலைமை
ஒரு விழாவுக்கு வந்தால் இளையராஜா தலைமை தாங்குவார் என்ற அறிவிப்பை நான் எதிர்பார்த்தேன். ஒருத்தரும் அறிவிக்கவில்லை. அப்படி எப்படி தான் தலைவர்.
தலைவர்
தலைவர் இல்லாமல் நடக்கிறது. நாடு அப்படி போய்க் கொண்டிருக்கிறது. நாடு அப்படி போவதால் நாமும் நாட்டோடு போவோம். நம்ம இல்லாமல் நாடு இல்லை. நாம் தான் நாடு.
தலைவன்
நான் யாருக்கும் தலைவன் அல்ல. இறைவனுக்கு மட்டும் தொண்டன். கவிக்கோ அவர்கள் செய்த சாதனையை இந்த நாட்டில் ஏன் இந்த உலகில் யாரும் செய்தது இல்லை என்று சொல்லலாம்.
எழுத்து
அவர் அறிமுகமான பின் அவர் எழுதியிருக்கிற அற்புதமான விஷயங்களை படித்தேன். எழுத்தும் எழுத்து உடையாருக்கு என்பேன் நான். உடையார் என்றதுமே வேற உடையாரை நினைக்காதீர்கள்.
கண்ணதாசன்
கவிஞர் கண்ணதாசன் சொன்னார் கலீல் ஜிப்ரானை படிக்கும்போது எல்லாம் இது போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லையே என்று வருத்தப்பட்டேன். இப்பொழுது அப்துல் ரகுமான் வந்துவிட்டார், என் கவலை தீர்ந்தது என்றார்.
கலைஞர்
கலைஞரோ, எனக்கு வெகுமானம் தருவதாக இருந்தால் ரகுமானை தாருங்கள் என்றார். நிஜமகாவே அவரது கவிதையை காதலித்து அந்த வார்த்தையை சொல்லியிருக்கிறார் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இவரை ஒத்த சிந்தனையுடைய கவிஞர்கள் இந்த உலகில் இல்லை. சத்தியம் சத்தியம் சத்தியம் என்றார்.