Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரு காஸ்டியூம் டிசைனர் தேசிய விருது பெற்ற கதை… பூர்ணிமா ராமசாமி
பரதேசி படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. காஸ்ட்டியூம் டிசைனராக அறிமுகமான படத்திற்கு விருது கிடைத்திருப்பது பூர்ணிமாவிற்கு பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த பூர்ணிமா என்று கேட்பவர்களுக்கு ஆச்சரியமான செய்தி அவர் காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மருமகள். அது மட்டுமல்ல பிரபல ஜவுளிக்கடையான நாயுடுஹால் நிறுவனரின் மகள் என்பது கூடுதல் தகவல்.
32 வயதாகும் பூர்ணிமா இல்லத்தரசி மட்டுமல்ல 5 வயது குழந்தையின் தாய். நேற்று வரை யாரென்று தெரியாமல் இருந்த பூர்ணிமாவை பரதேசி படத்திற்கு கிடைத்த தேசிய விருது இந்திய அளவில் அறியவைத்திருக்கிறது. பூர்ணிமாவிற்கு எப்படி இந்த வாய்ப்பு கிடைத்தது? மேற்கொண்டு படியுங்களேன்.
அழகான நட்பு வட்டம்
பூர்ணிமாவின் நட்பு வட்டம் மிகப்பெரியது. பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமார் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, பிருந்தா ஆகியோர் பூர்ணிமாவின் தோழிகள்.
பாலாவின் மனைவியும் தோழிதான்
பிருந்தாவின் மூலமாக இயக்குநர் பாலாவின் மனைவி மலரின் அறிமுகம் பிருந்தாவிற்கு கிடைக்கவே நட்பு வட்டம் பெரிதானது. அதுவே பாலாவிடம் சிபாரிசு செய்யும் வரை கொண்டு சென்றுள்ளது.
மனைவி சொல்லே மந்திரம்
மனைவி மலர் சொல்லிவிட்டால் அதற்கு அப்பீல் ஏது என்று நினைத்த பாலா பூர்ணிமாவிடம் பரதேசி படத்தின் கதை பற்றி விவாதம் செய்திருக்கிறார். அவரின் ஆர்வத்தைப் பார்த்து பட வாய்ப்பு உறுதியானது
ஒவ்வொரு ஊராக தேடியதன் பலன்
பீரியட் படம் என்பதால் ப்ரீ இண்டிபென்டன்ட் புக்ஸ், சவுத் இண்டியன் ஹிஸ்டாரிக்கல் புக்ஸ்னு தேடி தேடி படித்துள்ளார் பூர்ணிமா. அது 1930-க்கு முந்தைய காலகட்டத்துல வாழ்கிற அனுபவமாவே இருந்ததாம். தவிர பொருட்களைத் தேடி காஞ்சிபுரம், சென்னை என்று அலைந்திருக்கின்றனர். ஸ்வெட்டருக்காக ஊட்டி, நகைக்காக சிவகங்கை என பயணம் செய்தார்களாம்.
15 டிசைன் செய்தோம்...
ஒவ்வொரு கேரக்டர்களோட ஆடைக்கும் 10 - 15 வெரைட்டிகளில் டிசைன் செய்து பாலாவிடம் காட்டினால் அதில் இருந்து ஷார்ப்பாக தேர்வு செய்வாரம் பாலா. பித்தளை, வெள்ளி என்று ஏழைகளோட நகைகளை வரலாற்றுப் பக்கங்களில் பார்த்து உருவாக்கியிருக்கின்றனர்.
சணல் கோணி ஆடைகள்
படத்தின் ஸ்பெசல் சணல் கோணி ஆடைகள்தான். அது கதை நடக்குற காலத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளது. இதுதான் பூர்ணிமாவிற்கு விருது கிடைக்கச் செய்திருக்கிறது.
ஐஸ்வர்யா சொன்னதை நம்பலை
படம் வெளியான உடன் சில நாட்களில் ஆடை வடிவமைப்புக்கு நேஷனல் அவார்டு கிடைத்திருப்பதாக தோழி ஐஸ்வர்யா தனுஷ் இடம் இருந்து போன் வந்துள்ளது. சிறிது நேரத்தில் படத்தின் ஹீரோயின் வேதிகா வாழ்த்துச் சொன்னாராம். உடனே பாலாவின் மனைவி மலர் இடம் இருந்தும் போன் வரவே இருந்தும் போன் வரவே பாலாவைப் பார்த்து நன்றி சொல்லியிருக்கிறார்.
முதல் படத்திலேயே விருது
'உனக்கு கிடைக்கும்கிறது நான் எதிர்பார்த்ததுதான்! என்று சொல்லி வாழ்த்தினாராம் பாலா. அறிமுகமான முதல் படத்துலயே தேசிய விருது'னு பாராட்டுகள் தொடர்ந்துட்டு இருக்கு. இதுக்குக் காரணமா இருந்த காஸ்ட்யூம் ஹெட் செல்வம் அண்ணா, வாய்ப்பு கொடுத்த பாலா அண்ணா, என்னோட தோழி மலர் அனைவருக்கும் நன்றி என்று சொல்லி பூரிக்கிறார் பூர்ணிமா.
நாயுடு ஹால் குடும்பத்துப் பெண்
பூர்ணிமா 'நாயுடு ஹால்' குடும்பத்துப் பெண். சென்னையில பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு நாயுடு ஹால் கார்மென்ட்ஸ் வேலைகளை அண்ணனோட சேர்ந்து கவனித்து வந்தவருக்கு பரதேசி மூலம் பளிச் வெளிச்சம் கிடைத்துள்ளது.
குடும்பத்தினர் ஆதரவு
சினிமாவில் வேலை செய்த போது குடும்பத்துக்காக செலவழிக்கும் நேரம் குறைந்து போனது. அப்போது அம்மா, கணவர் திருமகன், ஐந்து வயது குட்டிப் பெண் சமன்னா எல்லோரும் எனக்கு ஆதரவாக இருந்தனர் என்று மகிழ்கிறார் பூர்ணிமா.
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!