Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஜூன் முதல் தேதியிலிருந்து தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடுகள் அமல்
சிறு முதலீட்டுப் படங்களைக் காக்கும் நோக்கில், பட வெளியீட்டில் தயாரிப்பாளர் சங்கம் விதித்துள்ள நிபந்தனைகள் வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் வாரம்தோறும் ஏராளமான படங்கள் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் வெற்றி பெறும படங்கள் மிகச் சிலதான்.
சிறு முதலீட்டுப் படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும தெரியாமல் காணாமல் போகும் நிலை உள்ளதால், பட வெளியீட்டை முறைப்படுத்த சில கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது. ஆனால் அவை இன்னமும் அமலுக்கு வரவில்லை.
இந்த நிலையில் க்யூப் மற்றும் யுஎப்ஓ நிறுவனங்களுக்கு எதிராக வரும் மே 10-ம் தேதி தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையுலக அமைப்புகள் உண்ணாவிரதம் அறிவித்துள்ளன.
இந்த உண்ணாவிரதத்தின்போது, பட வெளியீட்டுக்கான கட்டுப்பாடுகளை அமல் படுத்துவதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறதாம் தயாரிப்பாளர் சங்கம்.
வரும் ஜூன் முதல் தேதியிலிருந்து இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். இதன்படி ஜூன் முதல் தேதியிலிருந்து ஆண்டுக்கு 10 பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களில் மட்டும் பெரிய படங்களை வெளியிட முடியும். மற்ற நாட்களில் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டுப் படங்கள் வெளியாகும்.