Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஜோதிகாவின் ரசிகரான பிரேமம் நிவின்பாலி
சென்னை: பிரேமம் படம் மூலம் தமிழக ரசிகைகளை கொள்ளை கொண்ட நிவின்பாலி, நடிகை ஜோதிகாவின் தீவிர ரசிகராம்.
தனது ஆஸ்தான நடிகை ஜோதிகாவை சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் நேரில் சந்தித்து பேசிய புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு லட்சக்கணக்கில் லைக் அள்ளியுள்ளார் நிவின் பாலி.
ஒரு சில நடிகர்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும், ரசிகர்கள் மீண்டும் அவர்களை எப்போது திரையில் பார்ப்போம் என ஏங்குவர். அப்படி பல ரசிகர்கள் இந்த நாயகி மீண்டும் நடிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்தவர் நடிகை ஜோதிகா.
இன்று இளம் ரசிகர்களின்.. இல்லையில்லை ரசிகைகளின் மனதை கொள்ளைகொண்ட மலையாள சினிமாவின் இளம் நடிகர் நிவின்பாலியும் சினிமாவிற்கு வருவதற்கு முன்பிருந்தே நடிகை ஜோதிகாவின் ரசிகராக இருப்பவர் தான். ஆனால் இதுநாள் வரை ஜோதிகாவை நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பு நிவின்பாலிக்கு கிட்டவே இல்லை.
அவரை அருகில் பார்த்து ஒரு ஹலோ சொல்லிவிட்டால் போதும் என நினைத்துக்கொண்டிருந்த நிவின்பாலிக்கு சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது.. '36 வயதினிலே' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறப்பு விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த ஜோதிகா அரங்கத்துக்குள் நுழைந்தபோது நிவின்பாலி இருக்கும் வரிசையை கடந்துசெல்ல வேண்டியிருந்தது. அப்போது ஒரு ரசிகராக மாறிய நிவின்பாலி எழுந்து அவருக்கு வணக்கம் சொல்ல, பதிலுக்கு ஜோதிகாவும் சிறிது நேரம் நின்று அவருடன் பேசிவிட்டுத்தான் சென்றார்.
இந்த நிகழ்வை ஒருவர் கிளிக்க.. அதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு பதிவிட்டிருந்தார் நிவின்பாலி. இந்த போட்டோ வைரலானது. கூடவே லட்சக்கணக்கான லைக்குகளை அள்ளியது.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!