Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சென்னையில் பெய்து வரும் கன மழையால் தியேட்டர்களில் நீர்த்துப் போன கூட்டம்
சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சென்னை வடபழனி, வேளச்சேரி, ராயப்பேட்டை, அமைந்த கரை, மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.
குறிப்பாக வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும் கூட்டம் அதிக அளவில் சுற்றிப் பார்க்க செல்லும் வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் நடமாட்டம் இன்றி களை இழந்து காணப்பட்டது.
அதேபோல் கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. மெட்ரோ ரெயிலிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.