Don't Miss!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
நடிகர் சங்க கட்டிட விதிமீறல் வழக்கு: விஷாலுக்கு நிம்மதி அளித்த ஆய்வறிக்கை
சென்னை: பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படவில்லை என்று ஆய்வுக் குழுவின் வழக்கறிஞர் ஆணையர் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை தி. நகரில் நடிகர் சங்க கட்டிட கட்டுமானப் பணிகள் துவங்கியது. இந்நிலையில் கட்டிடம் வர உள்ள இடத்தில் பொது சாலையில் 33 அடி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை, வழக்கறிஞர் ஸ்ரீரங்கன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நடிகர் சங்க கட்டிடம் அமையவிருக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வழக்கறிஞர் ஆணையர் கே. இளங்கோவனுக்கு உத்தரவிட்டது.
மேலும் ஆய்வறிக்கையை சமர்பிக்கும் வரை கட்டுமானப் பணி மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில் இளங்கோவன் தனது ஆய்வறிக்கையை இன்று சமர்பித்துள்ளார்.
அதில், நடிகர் சங்க கட்டிடத்தில் விதிமீறல் இல்லை. பொது சாலை ஆக்கிரமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வருகிறது.