Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரிஷாவைத் தொடர்ந்து டிவிட்டரை விட்டு தெறித்து ஓடிய பீட்டா இந்தியா சிஇஓ பூர்வா
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் விமர்சித்ததை அடுத்து த்ரிஷா மட்டும் அல்ல பீட்டா இந்தியா அமைப்பின் சிஇஓ பூர்வா ஜோஷிபுராவும் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள பீட்டா அமைப்பின் ஆதரவாளரான நடிகை த்ரிஷா கடும் விமர்சனத்திற்குள்ளானார். அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் கூட அடித்துவிட்டனர்.
நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதே இல்லை என்ற அவரின் விளக்கத்தையும் யாரும் ஏற்கவில்லை.
ட்விட்டர்
தன்னை பலரும் கடுமையாக விமர்சித்ததை அடுத்து த்ரிஷா ட்விட்டரில் இருந்து வெளியேறினார். ஒரு பெண்ணை அவமதிப்பது தான் தமிழ் கலாச்சாரமா என்று காட்டமாக கேட்டார்.
பீட்டா இந்தியா சிஇஓ
ஜல்லிக்கட்டு கொடூரமானது, சட்டவிரோதமானது. காளைகளை அடக்குவதில் ஆண்மை இல்லை. பெண்களை அவமதித்து ஜல்லிக்கட்டை சட்டப்படி செல்லும்படியாக செய்ய சிலர் முயற்சிக்கிறார்கள் என பீட்டா இந்தியா சிஇஓ பூர்வா ஜோஷிபுரா தெரிவித்துள்ளார்.
ட்விட்டர், ஃபேஸ்புக்
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள பூர்வாவை நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டனர் . இதை பார்த்த பூர்வா கடுப்பாகி ட்விட்டர், ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறினார்.
விஷால்
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விஷால் இருப்பதாக பரவிய தகவலை அடுத்து அவரும் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவரும் ட்விட்டரை விட்டு வெளியேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.