Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிடுச்சி!- கவுண்டமணி
இன்றைக்கு படம் பார்ப்பவர்களை விட நடிக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கூறினார்.
49 ஓவுக்குப் பிறகு கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது.' இதில் சௌந்தர் ராஜா, ரித்விகா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.
கணபதி பாலமுருகன் இயக்குகிறார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
விழாவில் கவுண்டமணி பேசுகையில், "இன்றைக்கு படங்கள் ஓடுவதில்லை. வசூலில்லை என்று பலரும் குறைபட்டுக் கொள்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இப்போது படம் பார்ப்பவர்களை விட நடிப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். இதனால் படங்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. அத்தனை படங்களையும் திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. இதுதான் படங்கள் ஓடாததற்கு காரணம்.
நிறைய திரையரங்குகளில் பார்த்தால், படங்களின் ஒரு காட்சிதான் ஓடுகின்றன. திடீர்னு என்று அந்த காட்சியையும் நிறுத்திடறாங்க. இதுக்கெல்லாம் சில கட்டுப்பாடுகள் வேணும். அப்போதான் சினிமா ஆரோக்கியமா இருக்கும்.
‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' ஒரு நல்ல நகைச்சுவை படம். சாதிவிட்டு சாதி காதலிக்கும் ஜோடிகளைச் சேர்த்து வைக்கும் கதாபாத்திரம் எனக்கு. இப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட படம் என்பதால் நான் நடிக்க சம்மதித்தேன். காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் அரசியல் போன்ற அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கும்," என்றார்.