Don't Miss!
- Automobiles ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- Finance கூகுள் சுந்தர் பிச்சை எச்சரிக்கை.. கொத்து கொத்தா ஊழியர்கள் மீண்டும் பணிநீக்கம்..!
- News மட்டன், சிக்கன், பொங்கல், இட்லி, தோசை, வடை.. அங்கேயே சப்ளை ஆகுதா? ஆஹா, அதிமுக, திமுக, பாஜக செம பிஸி
- Technology நிலவை நோக்கி மீண்டும்-மீண்டும் படையெடுக்கும் ISRO.. முதல் இந்தியன் நிலவில் கால் பதிக்கும் வரை ஓயாது..
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கபாலி வசூலால் ரஜினிக்கு கண்திருஷ்டி: கிடா வெட்டி கழித்த ரசிகர்கள்
திருச்சி: கபாலி படம் சூப்பர் ஹிட்டானதால் ரஜினிகாந்துக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளதாம். அதனால் ரஜினி ரசிகர்கள் ஆட்டு கிடாக்களை பலி கொடுத்து திருஷ்டி கழித்துள்ளனர்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ரிலீஸான அன்றே ரூ.113 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. இந்தியாவில் கபாலியை தவிர வேறு எந்த படமும் இப்படி ஒரு வசூல் செய்தது இல்லை என்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.
கபாலி படம் இப்படி கண்டமேனிக்கு வசூல் செய்துள்ளதால் ரஜினிக்கு கண்திருஷ்டி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். எதுவாக இருந்தாலும் கண்திருஷ்டி மோசமானது என்று கூறிய அவர்கள் கண் திருஷ்டியையும் கழிக்க முடிவு செய்தனர்.
ரஜினிக்கு கண் திருஷ்டியை கழிக்க திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் கர்ணா தலைமையில் இன்று ஆட்டு கிடாக்களை பலி கொடுத்து சிறப்பு பூஜை செய்தனர். இந்த கண் திருஷ்டி கழிப்பு நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ரஜினி ரசிகர்களின் இந்த செயல் பலரையும் வியப்படைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.