Don't Miss!
- Education 5-ம் வகுப்பு வரையிலான வினாத்தாள் நடைமுறை மாற்றம்.!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
- News மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது பாமக.. சேர்ந்து மூழ்கப்போகுது.. கூட்டணி பற்றி கமெண்ட் அடித்த காங்கிரஸ்!
- Finance பிரியாணி கடையில் வருமான வரித்துறை ரெய்டு.. அட பெங்களூர் மேக்னா புட்ஸ்-ப்பா..!!
- Sports மும்பை அணியில் சூர்யகுமார் இல்லை? சமூக வலைத்தளத்தில் போட்ட பதிவால் ரசிகர்கள் சோகம்.. என்ன நடந்தது?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
என்னை விட்டுட்டு எப்படி சாப்பிடலாம்: சக நடிகரை ஷூவால் அடித்த நகைச்சுவை நடிகர்
மும்பை: விமானத்தில் தனக்கு முன்பு உணவு சாப்பிட்டதற்காக நடிகர் கபில் சர்மா கோபம் அடைந்து சக நடிகர் சுனில் குரோவரை அறைந்ததும் இல்லாமல் ஷூவால் அடித்துள்ளார்.
நடிகர் கபில் சர்மா 'தி கபில் சர்மா ஷோ' என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். கபில் சர்மா ஷோ குழு ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டது.
ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் நாடு திரும்பியபோது கபில் குடிபோதையில் சக நடிகரான சுனில் குரோவரை தாக்கினார். இந்நிலையில் விமானத்தில் நடந்த சம்பவத்தை பார்த்த பயணி ஒருவர் கூறியிருப்பதாவது,
கபில்
கபில் ஒரு விஸ்கி பாட்டிலை எடுத்து அதை முழுவதுமாக குடித்தார். அவர் விஸ்கி குடித்துக் கொண்டிருந்தபோது சிப்பந்திகள் அனைவருக்கும் உணவு வழங்கினர்.
உணவு
கபில் சர்மா குழுவினர் உணவை வாங்கி சாப்பிடத் துவங்கினர். இதை பார்த்த கபில் நான் சாப்பிடும் முன்பு நீங்கள் எப்படி சாப்பிடலாம் என்று தனது குழுவினரை திட்டினார்.
சுனில்
குடிபோதையில் கபில் திட்டுவதை பார்த்த சுனில் அவரை சமாதானம் செய்தார். அதற்கு கபிலோ தனது ஷூவை கழற்றி அவரை அடித்தார். மேலும் சுனிலின் சட்டை காலரை பிடித்து கன்னத்தில் பலமுறை அறைந்தார்.
கெட்ட வார்த்தை
கபிலின் செயலை பார்த்த குழுவினர் உணவு சாப்பிடுவதை பாதியில் நிறுத்திவிட்டு அதை சிப்பந்திகளிடமே கொடுத்துவிட்டார்கள். சக பயணிகள் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் கபில் சப்தமாக கெட்ட வார்த்தைகளால் குழுவினரை திட்டினார். சிப்பந்திகள் அவரை அமைதியாக இருக்குமாறு கூறியும் கேட்கவில்லை.