Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
பீப் பாய்ஸ் மீது மேலும் ஒரு வழக்கு!
அனிருத்தை இசையமைப்பாளர் என்றோ, சிம்புவை நடிகர் என்றோ இனி குறிப்பிட வேண்டிய அவசியத்தை அவர்களே வைக்கவில்லை. பீப் பாய்ஸ் என்றால் உலகத்துக்கே தெரியும்!
இந்த பீப் பாய்ஸ் விவகாரம் கொஞ்சம் அடங்கியமாதிரி தெரிந்த நிலையில், இப்போது மீண்டும் ஒரு வழக்கு இருவர் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியில்.
சிம்புவும் அனிருத்தும் பீப் பாடல் என்ற பெயரில் ஒரு கண்றாவிப் பாடலை வெளியிட்டதும் ஏக கண்டனங்கள், ஏகப்பட்ட வழக்குகள்.
சாதிச் சாயம்
பலரும் ஓயாமல் இந்த வழக்குகள் பற்றியே பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென இந்த வழக்குகளுக்கு சாதிச் சாயம் பூச ஆரம்பித்தனர். விளைவு, சிம்பு மீது பாமக சார்பில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. அதைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போடப்பட்ட வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன.
தூத்துக்குடியில்
இந்தநிலையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது ஆபாச பாடல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் சக்திகனி, தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார்.
வழக்கு
அதில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலும் வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடிய நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
உத்தரவு
இந்த மனுவை விசாரித்த நீதிபதி காமராஜ், சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மார்ச் மாதம் 7-ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மத்திய பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
வழக்குப் பதிவு
இதையடுத்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது 509 (பெண்களை இழிவுபடுத்துதல்), 67 (இன்டர்நெட்டில் வெளியிட்டு குற்றம் சுமத்துதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
-
என் குடும்பம் தான் என் பலம்.. எனக்கு தோன்றியதை செய்வேன்.. ஏ.ஆர்.ரகுமானின் மகள் பேட்டி!
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!