Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு நொடியில்... சிருஷ்டி டாங்கே நடிக்கும் பேய்ப் படம்!
முன்பெல்லாம் மாதத்துக்கு ஓரிரு பேய்ப் படங்கள்தான் வந்து கொண்டிருந்தன. ஆனால் இப்போது வாரம் இரண்டு என்கிற ரேஞ்சுக்குப் போய்விட்டது.
கோடம்பாக்கம் முழுவதும் நல்ல, கெட்ட பேய்கள் அத்தனை ஸ்டுடியோக்கள், எடிட்டிங் ரூம்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பட்டியலில் சேர வருகிறது இன்னொரு பேய்ப் படம். படத்துக்கு ஒரு நொடியில் என தலைப்பிட்டுள்ளனர்.
நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படம் இது.
இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ், சிசர் மனோகர், பிரித்வி, விஜயன், அபூர்வா சிவா, கீர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.
சாய் பர்வேஷ் இசையமைக்க, மகிசரலா ஒளிப்பதிவு செய்கிறார். எழுதி இயக்குபவர்
எம்ஏ சௌத்ரி.
படம் பற்றி இயக்குனர் சௌத்ரியிடம் கேட்டோம்...
"இது திகில் மற்றும் ஹாரர் சமந்தப்பட்ட படம்.. அதாவது பேய்ப் படம்.
பார்வதிபுரம் என்ற ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது ஒரு தீய சக்தி. ஐந்நூறு (500) ஆண்டுகளாக அந்த ஊருக்குள் யார் வந்தாலும் அவர்களை பலி வாங்கி விடுகிறது. அந்த கிராமத்துக்குள் நுழைய குழந்தைகளை பலி கொடுத்து தனக்கு மாபெரும் சக்தி வரவேண்டும் என்று நினைக்கிறான் மந்திரவாதி ஒருவன்.
அவனது என்னத்தை முறியடித்து டிவி சேனல் நிருபர் மதன் குழந்தைகளை காப்பாற்றுவதுடன் பார்வதிபுர மர்ம முடுச்சை விடுவிப்பதுதான் ஒரு நொடியில் படத்தின் கதை. ஐந்நூறு வருடங்களுக்கு முன் நிகழ்ந்ததாக சொல்லப்படும் இதே கதை தற்பொழுது குஜராத்தில் நிகழ்ந்ததாக சமீபத்தில் செய்தித் தாள்களில் வெளிவந்துள்ளது.
சுவாரஸ்யமான திரைக்கதையாக ஒரு நொடியில் உருவாகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது," என்றார்.