Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உலகம் ஒருவனுக்கா... ரஜினி "புகழ்" பாட கபிலனுக்கு "தடா" விதித்த பா.ரஞ்சித்
சென்னை: கபாலி டிரெய்லரைப் போலவே பாடல்களும் வைரலாகப் பரவி வருகின்றன. இந்நிலையில், அப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘உலகம் ஒருவனுக்கா' பாடல் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் கபாலி. இப்படத்தில் கவிஞர் கபிலன் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார்.
அதில் ஒரு பாடல், ‘உலகம் ஒருவனுக்கா' என துவங்குகிறது. முதலில் இப்பாடலை வழக்கம்போல ரஜினியின் பெருமைகளைக் கூறுவது போல் எழுதி இருந்தாராம் கபிலன். அதாவது ஏறக்குறைய ‘வந்தேண்டா பால்காரன்' மாதிரி.
ஆனால், அதனை கேட்ட பா.ரஞ்சித், இந்தப் பாடல் ரஜினியின் பெருமைகளை எடுத்துச் சொல்வது போல் இல்லாமல், கபாலி கதையினை கூறுவதுபோல் மாற்றச் சொன்னாராம். அதனைத் தொடர்ந்து அப்பாடலின் வரிகள் மாற்றப்பட்டதாம்.
இதேபோல் இப்பாடல் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து உருவாகியுள்ளது. அதாவது இந்தப்பாடலை கபிலன் சென்னையில் இருந்து எழுத, அதனை மலேசியாவில் இருந்து திருத்தியுள்ளார் ரஞ்சித். பின்னர் இப்பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் ஆஸ்திரேலியாவில் இருந்தபடி இசையமைத்துள்ளார்.