Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தடை நீக்கம்: நாளை முதல் பாகிஸ்தானில் இந்திய படங்கள் மீண்டும் திரையிடப்படுகிறது
கராச்சி: யூரி தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பாகிஸ்தானில் இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளன.
யூரி தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவியது. யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை அழித்து தீவிரவாதிகளை கொன்றது.
இந்நிலையில் இந்தியாவில் பாகிஸ்தான் கலைஞர்கள் பணியாற்ற தடை விதிப்பதாக இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிட தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் இந்திய படங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை முதல் பாகிஸ்தானில் மீண்டும் இந்திய படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதற்கிடையே தனியார் ஊடக குழுமம் ஒன்று ஆமீர் கானின் தங்கல் படத்தை பாகிஸ்தானில் வெளியிட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது அரசு விதித்த தடை அல்ல. மாறாக பாகிஸ்தான் திரைப்பட அதிபர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தாங்களாக முன்வந்து விதித்துக் கொண்ட தடையாகும்.