Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பக்கி பயலுக... எப்டியெல்லாம் பேர் வைக்கிறாங்க பாருங்க!
சென்னை: முன்பெல்லாம் படம் ரிலீசாவதில் தான் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இப்போதோ படத்திற்கு பெயர் வைக்கும்போதே ஆளாளுக்கு பிரச்சினைகளுடன் ஓடி வருகின்றனர்.
இதனாலேயே படத்திற்கு கதையைத் தேடுவதைப் போல், தலைப்பையும் ரூம் போட்டு யோசிக்கின்றனர் படக்குழுவினர்.
யாரும் யோசித்துப் பார்க்காத, பிரச்சினையில்லாத, அதே சமயம் மக்களுக்கு பிடித்தமான பெயர்களாக வைக்க வேண்டும் என மெனக்கிடும் அவர்கள், விதவிதமாக ஜாலி பெயர்களாக அறிமுகப் படுத்தி வருகின்றனர்.
பக்கி பயலுக...
அந்தவகையில், நாளை மறுதினம் ரிலீசாக இருக்கும் ஒரு படத்தின் பெயர் பக்கி பயலுக. வடிவேலு படத்தில் பெரும்பாலும் இந்த பக்கி என்ற வார்த்தையை சகஜமாகக் கேட்கலாம்.
புதுமுகங்கள்...
இந்நிலையில், தற்போது இதையே தங்களது படத்திற்கு தலைப்பாக்கியுள்ளனர். பட போஸ்டரில் ஒரு முகமும் தெரிந்த மாதிரியில்லை. பெரும்பாலும் புதுமுகங்கள் நடித்துள்ள படம் இது.
படப்பிடிப்பு...
இப்படத்தை ஸ்ரீ பெரியநாயகி அம்மன் பிலிம்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாரதி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு சேலம், ஆத்தூர், மேட்டூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
சேட்டை தான்...
வாலு வச்ச குரங்கும் சரி, நாலு பேரும் சேர்ந்த கேங்கும் சரி எங்கே போனாலும் சேட்டைதான் என்று ஊர் சுற்றிக் கொண்டு திரியும் நான்கு இளைஞர்கள் வேலை தேடி சென்னை வருகிறார்கள். ஒரு பெண்ணால் அவர்களது முன்னேற்றம் தடைபடுகிறது. அதில் இருந்து மீண்டு எவ்வாறு வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பது இப்படத்தின் கதையாம்.
கவுண்டமணி காமெடி...
இந்த மாதிரியான படத்தலைப்புகளைக் கேட்கும் போது, வாயில் நுழைகிற மாதிரி பேர் என்றதும் வாழைப்பழம் என்பார்களே, அந்த கவுண்டமணி, செந்தில் காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.