Don't Miss!
- News வாக்கு பெட்டியில் தாமரை.. வாக்குச்சாவடி வாசலிலும் "தாமரைப்பூ".. குவிந்த திமுகவினர்.. புதுச்சேரி பரபர
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Technology வெறும் ரூ.10,000 விலை.. சூப்பர் பாஸ்ட் 5G மொபைல்.. அசராமல் அடிக்கும் Realme.. எப்போது விற்பனை?
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Automobiles ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பசங்க 2 இசையமைப்பாளருக்கு சூர்யா வழங்கிய அசத்தல் பரிசு
சென்னை: பசங்க 2 வின் வெற்றியால் அப்படத்தின் இசையமைப்பாளர் அரோல் கெரோலிக்கு தங்கச் சங்கிலி ஒன்றை நடிகர் சூர்யா பரிசாக வழங்கி இருக்கிறார்.
சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து வெளியிட்ட பசங்க 2 திரைப்படம் 2015ன் வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியது.
மேலும் விமர்சகர்கள், ரசிகர்களாலும் இந்தப் படம் பெரிதும் பாராட்டப்பட்டது. குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் வசூலில் இப்படம் எந்தக் குறையும் வைக்கவில்லை.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த நடிகர் சூர்யாவிற்கு பசங்க 2 வெற்றி புத்துனர்ச்சியை அளித்திருக்கிறது. இதனால் அப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர்களுக்கு தொடர்ந்து பரிசுகளை சூர்யா வழங்கி வருகிறார்.
ஏற்கனவே இயக்குநர் பாண்டிராஜ்க்கு கார் ஒன்றினை பரிசாக வழங்கியிருந்த சூர்யா தற்போது படத்தின் இசையமைப்பாளர் அரோல் கெரோலிக்கு தங்கச் சங்கிலி ஒன்றை பரிசளித்துள்ளார்.
இசையமைப்பாளர் அரோல் கெரோலி இது குறித்து "சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூர்யாவிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரைப் பார்க்க சென்றபோது என்னைப் பாராட்டி தங்கச்சங்கிலி ஒன்றை கழுத்தில் அணிவித்தார்.
தொடர்ந்து நாம் இணைந்து பணியாற்றுவோம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் என்னை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் மிஷ்கின் அவர்களும் பசங்க 2 படத்தின் இசையைப் பாராட்டினார்" என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
சிங்கம், சிங்கம் 2 படங்களைத் தொடர்ந்து சூர்யா - ஹரி கூட்டணியில் உருவாகும் எஸ் 3 படப்பிடிப்பிற்காக சூர்யா தற்போது விசாகப்பட்டினம் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.