Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பாஸ்போர்ட் வழக்கு: குஷ்புவுக்கு சென்னை ஹைகோர்ட் அறிவுரை
சென்னை: மூன்று கிரிமினல் வழக்குகள் இருப்பதால் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட மறுக்கப்பட்டதை எதிர்த்து நடிகை குஷ்பு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சட்டசபை தேர்தலின்போது நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு மீது மூன்று கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்குகளை காரணம் காட்டி குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதை எதிர்த்து குஷ்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து கீழ் நீதிமன்றத்தை அணுகுமாறு குஷ்புவுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
குஷ்புவின் பாஸ்போர்ட் 2022ம் ஆண்டு வரை செல்லுமாம். அதில் புதிதாக ஸ்டாம்ப் ஒட்ட தாள்கள் இல்லாததால் பாஸ்போர்ட் அலுவலகம் சென்றாராம். பாஸ்போர்ட் பிரச்சனைக்கு பின்னர் அரசியல் உள்ளதாக குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார்.
என் குழந்தைகள் இங்கு தான் படிக்கிறார்கள், 25 ஆண்டுகளாக வரி செலுத்தும் நான் நாட்டை விட்டு ஓடியாப் போகப் போகிறேன் என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.