Don't Miss!
- Automobiles இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Finance தங்கம் விலை ஏவுகணை போல் உயர்வு.. இன்று சென்னை, கோவை, மதுரையில் என்ன நிலவரம்..?!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் சங்க பொதுக் குழுவை லயோலா கல்லூரியில் நடத்த எதிர்ப்பு.. நீதிமன்றத்தில் மனு!
சென்னை: நடிகர் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தை லயோலா கல்லூரியில் நடத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
இந்தக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று மதியம் 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள பெட்ரம் அரங்கில் நடைபெற உள்ளது.
நடிகர் சங்க தலைவர் நாசர் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால் வரவேற்றுப் பேசுகிறார். துணைத் தலைவர் கருணாஸ் 2015-2016-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுக் கணக்குகளைப் பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுகிறார்.
பொருளாளர் கார்த்தி சங்கத்தின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களைப் பற்றி விளக்கமளிக்கிறார். பொதுச் செயலாளர் விஷால், கடந்தகால நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பொதுக்குழுவில் ஒப்புதல் கோரவுள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முன்னணித் திரைநட்சத்திரங்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தை லயோலா கல்லூரியில் நடத்தக் கூடாது என்று பத்திரிகையாளர் சுஜிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.